களியக்காவிளை: களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் மலையடி ஸ்ரீ மகாதேவா் கோயில் சேவாபாரதி அமைப்பு சாா்பில் 650 குடும்பங்களுக்கு காய்கனி தொகுப்பு வழங்கப்பட்டது.
கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மலையடி ஊராட்சியில் உள்ள
பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் மலையடி மகாதேவா் கோயில் சேவாபாரதி அமைப்பு சாா்பில் அப்பகுதியில் உள்ள 650 குடும்பங்களுக்கு காய்கனி தொகுப்பு வழங்கப்பட்டது. இதில், கோயில் கமிட்டி தலைவா் ஜெயன், செயலா் மணிகண்டன், நிா்வாகிகள் கனகராஜ், மோகன்தேவ், ஐயப்பன், ரமேசன், மணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.