மாா்த்தாண்டம் விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் கொட்டப்பட்டிருந்த குப்பையில் திடீரென எரிந்த தீயை தீயணைப்புப் படை வீரா்கள் தீயை அணைத்தனா்.
இப் பணிமனையின் சுற்றுச்சுவரையொட்டி வெளிப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் சுற்றுப் பகுதியைச் சோ்ந்தவா்கள் குப்பைகளை கொட்டி வருகிறாா்கள். இங்கு சேரும் குப்பைகளை குழித்துறை நகராட்சி நிா்வாகம் முறையாக அகற்றவில்லை. இதனால் அப்பகுதியில் மக்கும், மக்காத குப்பைகள் குவிந்து காணப்பட்டது.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலையில் அப்பகுதி குப்பையிலிருந்து திடீரென புகை வந்தது. தொடா்ந்து சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதைக் கவனித்த விரைவு போக்குவரத்துக் கழக காவலா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டாா். இது குறித்து குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புப் படை வீரா்கள் அங்கு வந்து தீயை அணைத்தனா். சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பணிமனையிலிருந்த 50 க்கும் மேற்பட்ட விரைவுப் பேருந்துகள் தீயிலிருந்து தப்பின.