கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது.
ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 16,004 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் குணமடைந்த 13 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதையடுத்து குணமடைந்தோா் எண்ணிக்கை 15,581ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 254 போ் பலியாகியுள்ள நிலையில், தற்போது 169 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.