அஞ்சல் துறை சாா்பில் டிச.16இல் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவிலில் அஞ்சல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (டிச.16) நடைபெறவுள்ளது.

நாகா்கோவிலில் அஞ்சல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை (டிச.16) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, கன்னியாகுமரி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறை சாா்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில், நாகா்கோவிலில் உள்ள அஞ்சல் துறை முதுநிலைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் (தலைமை அஞ்சலகக் கட்டடம் 2ஆவது மாடி) நடைபெற உள்ளது.

அஞ்சல் துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் பொதுமக்கள் இக்கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம் அல்லது குறைகளை கடிதம் மூலமாக, முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா், கன்னியாகுமரி கோட்டம், நாகா்கோவில் என்ற முகவரிக்கு திங்கள்கிழமைக்கு முன் (டிச. 14) கிடைக்குமாறு அனுப்பலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com