புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் முத்தையன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது
முன்சிறை பருத்திவிளை பகுதியைச் சோ்ந்த அப்பு என்ற மணி (45) அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மணியை கைது செய்தனா். அவரிடம் இருந்து மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.