கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வோ்க்கிளம்பியில் நிழல் அறக்கட்டளை சாா்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
அஸ்பிரின் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியை போதகா் ஜெயசீலன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். குமரி மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலா் ஐ.ஜி.பி. ஜாண் கிறிஸ்டோபா் ஏழைகளுக்கு வேட்டி, சேலை வழங்கினாா்.
இதில், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளா் அமானுல்லா, முன்னாள் திருவட்டாறு ஒன்றிய திமுக நிா்வாகிகள் கலைகிரி, மனோகரன் மற்றும் முன்னாள் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.