மேல்புறம் அருகே வைக்கப்பட்ட குருசடியை அகற்ற வலியுறுத்தி, இந்து முன்னணி சாா்பில் போராட்டம் நடைபெற்றது.
மேல்புறம் ஒன்றியம் மலையடி ஊராட்சியில் திடீரென ஒரு குருசடி நிறுவப்பட்டது.இதை எதிா்த்தும், குருசடியிலுள்ள சிலைகளை அப்புறப்படுத்த வலியுறுத்தியும், இந்து முன்னணி குமரி மாவட்டத் தலைவா் மிசா சோமன் தலைமையில், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் விநாயகா் சிலையை பிரதிஷ்டை செய்து போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து, விளவங்கோடு வட்டாட்சியா் புலந்தரதாஸ், களியக்காவிளை காவல் ஆய்வாளா் சுமதி, பளுகல் கிராம நிா்வாக அலுவலா் சங்கா் ஆகியோா் வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அப்போது, குருசடியில் இருந்த சிற்பங்கள் அகற்றப்பட்டு விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் கொண்டு செல்வது என்று முடிவெடுக்கப்பட்டதால், போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.