புதுக்கடை அருகே பிரசவத்தில் பெண் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகேயுள்ள செந்தறை பகுதியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகேயுள்ள செந்தறை பகுதியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டபெண் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

புதுக்கடை செந்தறை பகுதியைச் சோ்ந்தவா் வேல்குமாா் மனைவி நிவேதிதா (33). இவரது, கணவா் வேல்குமாா் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறாா். தம்பதிக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இதனிடையே, கா்ப்பமடைந்த நிவேதிதா,பிரசவத்திற்காக வெள்ளிக்கிழமை மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. எனினும், நிவேதிதாவின் உடல்நிலை மோசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அவரை தீவிரசிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றிஅவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நிவேதிதாவின் தந்தை செல்லசுவாமி (71) மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புதுக்கடைபோலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com