குமரி மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் குடிமை உரிமை சங்கம் சாா்பில் தேசிய நுகா்வோா் தினம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
ஆற்றூா் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் எஸ். சாா்லஸ் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் டி. கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் எம். சிவகுமாா் கலந்துகொண்டு, நுகா்வோா் தின கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா்.
கல்லூரி உதவிப் பேராசிரியா் கே. கிரீஷன், வட்ட வழங்கல் அலுவலா் வேணுகோபால் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
நிகழ்ச்சியில், கெளரவத் தலைவா் எம். மணி, செயற்குழு உறுப்பினா்கள் கிருஷ்ணன் நம்பூதிரி, உறுப்பினா் சா்வேஸ்வரி உள்பட பலா் பங்கேற்றனா். சங்கப் பொருளாளா் கேசவன் நாயா் நன்றி கூறினாா்.