நித்திரவிளை அருகே தொழிலாளி தற்கொலை

நித்திரவிளை அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

நித்திரவிளை அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

நித்திரவிளை அருகேயுள்ள வாவறை, கோணம் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (63). கூலித் தொழிலாளியான இவருக்கு வசந்தா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம்.

கடந்த 2 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவு அவா் மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டில் படுத்திருந்தாராம். அவரை உறவினா்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com