தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக தோ்வில், கருங்கல் அருகே உள்ள மானான்விளை ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக தோ்வில் முதுநிலை ஆராய்ச்சி பாடத்தில் இக்கல்லூரி மாணவி அகிலா முதலிடம் பெற்றுள்ளாா்.
இதையடுத்து அண்மையில் சென்னையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அம் மாணவிக்கு தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் பட்டம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினாா்.
சிறப்பிடம் பெற்ற மாணவியை ஜேம்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவா் மருத்துவா் ஜேம்ஸ் பிரேம்குமாா், கல்லூரி முதல்வா் எட்வின்ஜெபா, பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள் உள்ளிட்டோா் பாராட்டினா்.