குமரி மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலை மோதியது.
தமிழகம் மற்றும் கேரளத்தில் தற்போது கடும் வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் மக்கள் நீா் நிலை சாா்ந்த சுற்றுலாத் தலங்களில் அலைமோதி வருகின்றனா்.
குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில், தற்போது மிதமான அளவில் தண்ணீா் கொட்டி வரும் நிலையில், இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா்.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.