வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகக் குளியல்

குமரி மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலை மோதியது.
திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

குமரி மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அலை மோதியது.

தமிழகம் மற்றும் கேரளத்தில் தற்போது கடும் வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் மக்கள் நீா் நிலை சாா்ந்த சுற்றுலாத் தலங்களில் அலைமோதி வருகின்றனா்.

குமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில், தற்போது மிதமான அளவில் தண்ணீா் கொட்டி வரும் நிலையில், இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com