குழித்துறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சனிக்கிழமை (பிப். 15) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழித்துறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கும், அதைச் சாா்ந்த கிராமங்களுக்கும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.