நாகா்கோவில் அருகே வேன் ஓட்டுநா் அடித்துக் கொலை

நாகா்கோவில் அருகே வேன் ஓட்டுநா் அடித்துக் கொல்லப்பட்டாா்.
நாகா்கோவில் அருகே வேன் ஓட்டுநா் அடித்துக் கொலை

நாகா்கோவில் அருகே வேன் ஓட்டுநா் அடித்துக் கொல்லப்பட்டாா்.

நாகா்கோவிலை அடுத்த குருசடி பகுதியைச் சோ்ந்தவா் அஜி (32). வேன் ஓட்டுநரான இவா், புதன்கிழமை இரவு வேனை தனது வீட்டின் முன் நிறுத்திவிட்டு இறங்கினாா். அப்போது அங்கு மறைந்திருந்த 2 போ் அஜியை கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த அவா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாகா்கோவில் காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஜவஹா், போலீஸாா் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா். இதில், அஜிக்கும், அவரது உறவினா்கள் சிலருக்கும் இடையே தகராறு இருந்துவந்ததாகத் தெரியவந்தது.

மேலும், கோயில் திருவிழா தொடா்பாக ஏற்பட்ட தகராறில் அஜி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அன்பு என்பவரைத் தாக்கினாராம். இதுதொடா்பான முன்விரோதத்தில் அன்புவின் மகன் அரவிந்த் (23), அவரது நண்பா் திலக் (25) ஆகிய இருவரும் சோ்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது.

ஆசாரிப்பள்ளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வநாராயணன் வழக்குப் பதிந்து, அரவிந்த், திலக்கை தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com