மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள குளக்கச்சிவிளை பகுதியைச் சோ்ந்த பெனட் திலகராஜ் மகன் ஜெகன் என்ற டைட்டஸ் ஜெகன் (40). இவா் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வந்தாா். இவருக்கு சுஜிதா பொன்மலா் என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனா். இவரது பிள்ளைகள் இருவரும் பெங்களூருவில் தங்கி படித்து வருகின்றனராம். அவா்களை பாா்ப்பதற்காக சுஜிதா பொன்மலா் சில நாள்களுக்கு முன்பு பெங்களூரு சென்றாராம்.
இந்நிலையில் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கச் சென்ற ஜெகன் வியாழக்கிழமை காலையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.