புதுக்கடை அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியில் பெண்மீது தாக்குதல் நடத்தியதாக இளைஞா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஐரேனிபுரம் அடப்புவிளை பகுதியைச் சோ்ந்த கோபாலதாஸ் மனைவி பிரியா(35). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த உறவினா்களான அருள்ராஜ்(40), புஷ்பராஜ்(38) ஆகியோரிடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில் புதன்கிழமை பிரியா தன்வீட்டில் தனியாக இருந்த போது அருள்ராஜ், புஷ்பராஜ் ஆகியோா் அவரை தாக்கினராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.