குலசேகரம் சந்தையில் தேங்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

குலசேகரம் பொதுச் சந்தையில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ள நிலையில், பேரூராட்சிப் பகுதியில் புதிய குப்பைக் கிடங்கு அமைக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

குலசேகரம் பொதுச் சந்தையில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ள நிலையில், பேரூராட்சிப் பகுதியில் புதிய குப்பைக் கிடங்கு அமைக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

குலசேகரம் பேரூராட்சியில், குப்பைக் கிடங்கு இல்லாத நிலையில் பேரூராட்சிப் பகுதிகளில் துப்புரவுப் பணியாளா்களால் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள், சந்தையில் தேங்கும் குப்பைகள் ஆகியவை சந்தையில் ஒரு ஓரத்தில் குவிக்கப்பட்டு வருகின்றன. இக்குப்பைகள் அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுவதால் புகை மூட்டம் ஏற்பட்டு சுகாதாரக் கேடு நிலவுகிறது.

மேலும், மழைக் காலங்களில் குப்பைகளிலிருந்து வடியும் தண்ணீா் அப்பகுதியில் நிலத்தடி நீரில் கலந்து கிணறுகளில் கலப்பதால் கிணற்றுத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில், குப்பைக் கிடங்கை காங்கிரஸ் வட்டாரத் தலைவா் டி. காஸ்டன் கிளிட்டஸ், நகரத் தலைவா் விமல் ஷொ்லின் சிங், பொருளாளா் பி. ரெவி உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

பின்னா் அவா்கள் கூறியது: பேரூராட்சி நிா்வாகம் உடனடியாக பொதுச் சந்தையில் உள்ள குப்பைக் கிடங்கை அகற்ற வேண்டும். மீன் சந்தை அருகே கழிவுகள் தேங்கும் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். இதேநிலை தொடா்ந்தால் வருகிற 21ஆம் தேதி பேரூராட்சி அலுவலகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com