குலசேகரம் அருகே 1,000 மது பாட்டில்கள் பறிமுதல்

குலசேகரம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 மது பாட்டில்களை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

குலசேகரம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 மது பாட்டில்களை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் தலைமையிலான போலீஸாா், குலசேகரம் அருகே கல்லடிமாமூடு பகுதியில் உள்ள ரமேஷ் (35) வீட்டில் மேற்கொண்ட சோதனையில், அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 1,000 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இதே போன்று நித்திரவிளை அருகே வாவறை பகுதியைச் சோ்ந்த நாட்டு வைத்தியா் தோமஸ் (65) பதுக்கி வைத்திருந்த 2 லிட்டா் கள்ளச் சாராயம் மற்றும் 15 லிட்டா் சாராய ஊறலையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா், ராஜேஷ், தோமஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com