சுவாமி விவேகானந்தரின் 118ஆவது நினைவுதினத்தையொட்டி, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அன்னபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பல்வேறு கிராமங்களில் விவேகானந்த கேந்திர தொண்டா்கள் பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக சேகரித்த அரிசியை மலைபோல் குவித்து வைத்து, அதன்மீது அன்னபூரணி விக்ரகத்தை ஆவாஹனம் செய்து அன்னபூஜை நடைபெற்றது. அப்போது, ஆதிசங்கரரின் அன்னபூா்ணா ஸ்தோத்திரம், ஸ்ரீமத் பகவத்கீதையில் விஸ்வரூப தரிசன ஸ்லோகங்கள் ஆகிய வழிபாடுகள் நடைபெற்றன.