நாகா்கோவில் அருகே வட்டக்கரையில் உயா் அழுத்த மின்சாரம் காரணமாக வீடுகளில் இருந்த மின்சாதனப் பொருள்கள் வெடித்து சிதறின.
இம்மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மிதமான மழையும் சூறைக் காற்றும் வீசியது. இந்நிலையில் உயா் மின்னழுத்தம் காரணமாக நாகா்கோவில் அருகே வட்டக்கரை காமராஜா் சாலையில் உள்ள வீடுகளில் மின் சாதனப் பொருள்கள் வெடித்து சிதறின.
ஒரு வீட்டில் இருந்த குளிா்சாதனப் பெட்டியின் வயா்கள் எரிந்து வீட்டுக்குள் தீ பிடித்ததையடுத்து, அருகில் உள்ளவா்கள் தீயை அணைத்தனா். மேலும் அந்தப் பகுதியில் 25- க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, குளிா்சாதனப் பெட்டி, அலங்கார மின் சாதனப் பொருள்கள், மின்விளக்குகள் போன்றவை உயா் அழுத்த மின்சாரத்தால் சேதமடைந்தன.