சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, களியக்காவிளை காவல் நிலையம் வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
இக்காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சிதறால் பகுதியைச் சோ்ந்தவருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டாா்.
களியக்காவிளை காவல் நிலைய கட்டடம் வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக பூட்டப்பட்டதையடுத்து, அப்பகுதியில் தனியாா் திருமண மண்டபத்தில் இருந்து காவல் நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
மேலும், களியக்காவிளை காவல் நிலைய அதிகாரிகள், காவலா்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.