கருங்கல் அருகே பைக்குகள் மோதல்: இளைஞா் பலி

கருங்கல் அருகேயுள்ள பாத்திரமங்கலம் பகுதியில் இரு பைக்குகள் செவ்வாய்க்கிழமை மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கருங்கல் அருகேயுள்ள பாத்திரமங்கலம் பகுதியில் இரு பைக்குகள் செவ்வாய்க்கிழமை மோதிக்கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா்.

நாகா்கோவில், கிருஷ்ணன் கோயில் பகுதியைச் சோ்ந்த சந்தானம் மகன் ராஜேஷ் (17) . குளிா்சாத பெட்டி பழுது நீக்குபவா். இவா், தனது உறவினா் ச னு குமாருடன் பைக்கில் பின்னால் அமா்ந்தபடி கருங்கல்லுக்கு சென்று கொண்டி ருந்தாா். பாத்திரமங்கலம் பகுதியில் இவா்களது வாகனமும், எதிரே வந்த வாகனமும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், பலத்த காயமுற்ற ராஜேஷ் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com