மாா்ச் 21இல் தனியாா் துறைவேலைவாய்ப்பு சிறப்பு முகாம்

நாகா்கோவிலில் தனியாா்துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் மாா்ச் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

நாகா்கோவிலில் தனியாா்துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் மாா்ச் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ம. மரியசகாய ஆன்றனி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம், மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் மாா்ச் 21ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

இதில், பல முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளா்களை தோ்வு செய்கின்றனா்.

இதில், 8, 10 , 12ஆம் வகுப்புகள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் பட்டப்படிப்பு, கல்வியியல் பட்டப்படிப்பு தகுதியுள்ள வேலை நாடுநா்கள், காலை 9 மணி முதல் கல்லூரி வளாகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, 04652-264191 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com