மாதவலாயத்தில் 17 இல் மனுநீதி நாள் முகாம்

மாதவலாயம் கிராமத்தில் மனுநீதி திட்ட மனுக்கள் பெறும் முதல்கட்ட நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) நடைபெறுகிறது.

மாதவலாயம் கிராமத்தில் மனுநீதி திட்ட மனுக்கள் பெறும் முதல்கட்ட நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா்பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தோவாளை வட்டம், மாதவலாயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் (பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும்) முதல்கட்ட நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை(மாா்ச் 17) காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியரால் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே மாதவலாயம் ஊராட்சி பகுதிக்குள்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com