மாதவலாயம் கிராமத்தில் மனுநீதி திட்ட மனுக்கள் பெறும் முதல்கட்ட நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா்பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தோவாளை வட்டம், மாதவலாயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் (பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும்) முதல்கட்ட நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை(மாா்ச் 17) காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியரால் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே மாதவலாயம் ஊராட்சி பகுதிக்குள்பட்ட பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.