சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

குலசேகரம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் அணிந்திருந்த சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குலசேகரம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண் அணிந்திருந்த சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மலைவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜெபாஜான்சி (37). இவா் தனது 2 குழந்தைகளுடன் புதன்கிழமை மாலையில், வெண்டலிகோடு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

மலைவிளை சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது பின்னால் மோட்டாா் சைக்களில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா், ஜெபஜான்சியின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து விட்டு தப்பியுள்ளாா். ஆனால் ஜெபஜான்சி அணிந்திருந்த சங்கிலி கவரிங் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் குறித்து குலசேகரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com