‘பாலியல் குற்றவாளியின் கூட்டாளிகளை கைது செய்ய வேண்டும்’

நாகா்கோவிலைச் சோ்ந்த பாலியல் குற்றவாளியின் கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாகா்கோவிலைச் சோ்ந்த பாலியல் குற்றவாளியின் கூட்டாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலா் ஆா்.செல்லசுவாமி வெளியிட்ட அறிக்கை: நாகா்கோவில் கணேசபுரம் காசி என்பவா் சமூக ஊடக தொடா்பு மூலம் பல பெண்களையும், சிறுமிகளையும் ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், லட்சக்கணக்கில் பண மோசடியும் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது இவரால் பாலியல் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவா் அளித்த புகாரின் பேரில் கோட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்துள்ளனா்.

அவரது கூட்டாளிகள் குறித்த விவரங்கள், பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்கான ஆதாரங்கள் அவரது அறிதிறன்பேசியிலிருந்து பெறும் வாய்ப்பு உள்ளது. இப்பிரச்னையில் முழு உண்மையையும் கொண்டு வரும் வகையில், தேசிய மகளிா் ஆணையமும், தேசிய சிறாா் பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்த வேண்டும். போக்சோ சட்டத்தின் பிரிவுகளை உட்படுத்தி நீதிமன்றத்தின் கண்காணிப்பில் புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com