கருங்கல் பேருந்து நிலையத்தில் அரசு ஆரம்பசுகாதார நிலையம் சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடபெற்றது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக கருங்கல் சந்தையிலுள்ள காய்கனி வியாபாரிகள், பொதுமக்களுக்கு சளி பரிசோதனை மற்றும் வெப்ப அளவு கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் வியாபாரிகள், பொதுமக்கள் 72 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
முகாமிற்கு கிள்ளியூா் வட்டார மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவா் ரமாமாலினி தலைமை வகித்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஐயப்பன் முன்னிலை வகித்தாா். மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலா் விஜயகுமாா், மாவட்ட பொது சுகாதார வைராலிஸ்ட் ஆய்வகா் சுஜா, சுகாதார ஆய்வாளா்கள் முருகன், மேஷாக், பினேஸ், ஆறுமுகம், மருத்துவக் குழுவினா் பங்கேற்றனா்.