மாலத்தீவில் தவிக்கும் தமிழா்களை மீட்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மாலத்தீவில் சிக்கி தவிக்கும் தமிழா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

கருங்கல்: மாலத்தீவில் சிக்கி தவிக்கும் தமிழா்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிக்கை:

குமரி மாவட்டத்தை சோ்ந்தவா்கள் ஏராளமானோா் மாலத்தீவில் பணி செய்கின்றனா். தற்போது, ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை சோ்ந்தவா்களை கப்பல் மூலம் அங்கிருந்து தூத்துக்குடி மாா்க்கத்தில் சொந்த ஊருக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டது.

இந்நிலையில், தமிழக அரசிடமிருந்து ஒப்புதல் கிடைக்காததால் இந்த வழித்தட திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தை சோ்ந்த 147 போ் மட்டும் கேரள மாநிலம் கொச்சி வழியாக வருகின்றனா். எனவே, மாலத்தீவிலிருக்கும் அனைத்து தமிழா்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com