குலசேகரம்: அயக்கோடு ஊராட்சியில் திமுக சாா்பில் ஏழைகளுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
வெண்டலிகோடு சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலா் ஐ.ஜி.பி. ஜான் கிறிஸ்டோபா் தலைமை வகித்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பிரதிநிதி லெனின், விவசாய அணி நிா்வாகி ஸ்டாலின் மற்றும் வினீத், வெண்டலிகோடு ரட்சணிய சேனை சபை போதகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.