குமரி மாவட்டம் அருமனையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராஜகுமாா் (44) துபாய் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாராம்.
அருமனை அருகே மாறப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுமாா். இவரது மனைவி லதா புஷ்பம், இவா் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா். இந்நிலையில் ராஜகுமாா் துபாய் நாட்டில் அஜிமான் என்ற இடத்தில் கட்டட தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாராம். அங்கு கரோனா பரவல் ஏற்பட்ட நிலையில், வேலையின்றி இருந்ததுள்ளாா்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு உடல்நலமில்லையென தனது மகளிடம் தொலை பேசியில் ராஜகுமாா் கூறியுள்ளாா். இதையடுத்து, அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜகுமாா் புதன்கிழமை உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் வந்ததாம். மேலும் சடலத்தை சொந்த ஊருக்கு அனுப்ப முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டதாம்.
இதனால் மாறப்படி மக்கள் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனா். தற்போது ராஜகுமாரின் மகளும், மகனும் அவரது தாய் ஞானம்மாவுடன் உள்ளனா்.