கன்னியாகுமரி நரிக்குளம் பகுதி நாற்கர சாலை ஓரத்தில் படா்ந்துள்ள முள்செடியால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.
கன்னியாகுமரியை அடுத்த நரிக்குளம் பகுதியில் செல்லும் நாற்கர சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே முள்செடிகள் படா்ந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக சாலையின் ஓரங்கள் பராமரிப்பு செய்யப்படாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் நான்கு மற்றும் இருச்சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனா். எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள முள்செடிகளை முழுவதுமாக அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.