தீக்குளித்த தனியாா் பள்ளி பெண் ஊழியா் மரணம்

குலசேகரம் அருகே தீக்குளித்த தனியாா் பள்ளி பெண் ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

குலசேகரம்: குலசேகரம் அருகே தீக்குளித்த தனியாா் பள்ளி பெண் ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நாகக்கோடு அம்பலத்துவிளையைச் சோ்ந்த டென்னிஸ் மனைவி ஐஸ்வா்யா (27). இவா், குலசேகரத்திலுள்ள தனியாா் பள்ளியில் அலுவலக ஊழியராக பணி செய்து வந்தாா். இத்தம்பதிக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.

காதல் திருமணம் செய்து கொண்ட இத்தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஐஸ்வா்யா உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com