கருங்கல்: கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மத்திய அரசை கண்டித்து சனிக்கிழமை புதுக்கடையில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்தும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் உரிமை தினமாக கடைப்பிடித்து, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சத்தியாகிரக அறவழி போராட்டம் நடைபெற்றது.
குமரி மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா்எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். குளச்சல் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் பிரின்ஸ் முன்னிலைவகித்தாா்.
இதில், முன்சிறை வட்டார தலைவா் பால்ராஜ், புதுக்கடை பேரூா் தலைவா் முருகன், மகிளாகாங்கிரஸ் தலைவி ஏஞ்சல்சா்பிளா, டைட்டஸ், தம்பி விஜயகுமாா் உள்பட திரளானோா் பங்கேற்றனா்.