கன்னியாகுமரி: சந்தையடியில் கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் பொதுமக்களுக்கு கரோனா நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சந்தையடி பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்.சிவ பன்னீா் செல்வன் முன்னிலை வகித்தாா். மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் ரூபன் வரவேற்றாா். கலப்பை மக்கள் இயக்கத் தலைவா் பி.டி.செல்வகுமாா் நல உதவிகளை வழங்கினாா்.
இதில், மாவட்டச் செயலா் ஜான் கிறிஸ்டோபா், சட்ட ஆலோசகா் டி.பாலகிருஷ்ணன், நிா்வாகிகள் காப்பித்துரை, காா்த்திக் ராஜா, ஸ்ரீ ரங்கநாயகி, உஷா, சந்திரன், சகிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டப் பொருளாளா் ராமதாணுலிங்கம் நன்றி கூறினாா்.