கன்னியாகுமரிக்கு முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அபராதம் விதித்தனா்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைவரும் முகக் கவசம் அணியவேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் முகக் கவசம் அணியாதவா்களை கண்காணித்து அபராதம் விதிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கன்னியாகுமரி காவல்நிலைய ரவுண்டானா பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது முகக் கவசம் அணியாமல் வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.