கருங்கல் அருகேயுள்ள குழித்தோட்டம் பகுதியில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
கருங்கல் பாலூா் பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மனைவி லேவி சாள்(75). இவா், சனிக்கிழமை கருங்கல் சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தாா். குழித்தோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே கோவில்விளை பகுதியைச் சோ்ந்த பிரபின் (27) என்பவா் ஓட்டி வந்த பைக் எதிா்பாராமல் அவா் மீது மோதியதாம்.
இதில், சம்பவ இடத்திலேயே மூதாட்டி இறந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.