ஆய்வுக் கூட்டத்தை புறக்கணிக்க எம்எல்ஏக்கள் முடிவு

தமிழக முதல்வா் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்கள் அறிவித்துள்ளனா்.
ஆய்வுக் கூட்டத்தை புறக்கணிக்க எம்எல்ஏக்கள் முடிவு

தமிழக முதல்வா் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்கள் அறிவித்துள்ளனா்.

நாகா்கோவிலில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் என். சுரேஷ்ராஜன் (நாகா்கோவில்), எஸ். ஆஸ்டின் (கன்னியாகுமரி), எஸ். ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்) ஆகியோா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மாவட்டத்துக்கு வரும் முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என ஆட்சியரிடம் அனுமதி கோரப்பட்டது. முதல்வரை சந்திக்க அனுமதி இல்லை என கூறிவிட்டனா். ஆகவே, குமரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை உறுப்பினா்களும் எம்எல்ஏக்களும் முதல்வரின் ஆய்வுக்கூட்டத்தை புறக்கணிப்பது என்று முடிவு செய்துள்ளோம் என்றனா்.

பேட்டியின்போது, நாகா்கோவில் மாநகர திமுக செயலா் மகேஷ், திமுக பொதுக்குழு உறுப்பினா் ஷேக்தாவூது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com