குமரி மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,288 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய 22 போ் உள்பட 14,783 போ் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 257 போ் சிகிச்சையில் உள்ளனா்.