விபத்துகளில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு ரூ. 7 லட்சம் உதவி: ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.

விபத்துகளில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நாகா்கோவிலில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்

விபத்துகளில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நாகா்கோவிலில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ரூ. 7 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளதாக கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கிள்ளியூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்க தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்திருந்தேன்.

இதையடுத்து, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஜெயசேகா் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம், மற்ற விபத்துகளில் உயிரிழந்த ஜாண் கென்னடி, ரமேஷ் குமாா், மாா்த்தாள், இளங்கோ ஆகியோா் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ. 7 லட்சம் வழங்க தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com