தேங்காய்ப்பட்டினத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவப் பிரதிநிதிகள் சாா்பில் அனைத்துக் கட்சியினா் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, முன்சிறை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் சித்திக் தலைமை வகித்தாா். அகில இந்திய மீனவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் ஜோா்தான் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட வள மீன்கள்(குஞ்சுமீன்கள்) படகு மூலம் கொண்டு வரும் மீனவா்கள் மீது மீன்வளத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த துறைமுகம் அருகே பரக்காணி தாமிரவருணி ஆற்றுப் பகுதியில் தனியாா் மீன்பிடித் துறைமுகம் செயல்படுவதையும், அனுமதி பெறாத கேரள விசைப்படகுகளையும் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பைங்குளம் திமுக பேரூா் செயலா் நடராஜன், சதீஷ்குமாா், ராஜன், வின்சென்ட், மீனவப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.