‘வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க நவ.16 முதல் விண்ணப்பிக்கலாம்’

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு திங்கள்கிழமை (நவ. 16) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு திங்கள்கிழமை (நவ. 16) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக தொகுதி வாரியான வரைவு வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை (நவ.16) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்படவுள்ளது.

மேலும், 1.1.2021-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூா்த்தியானவா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்தல் மற்றும் பெயா் நீக்குதல், முகவரி மாற்றம் தொடா்பாக திங்கள்கிழமை (நவ.16) முதல் டிச.15ஆம் தேதி வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்களான 6, 7, 8, 8 ஏ ஆகியவற்றை வழங்கலாம்.

மேலும், தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் நவ. 21, 22 மற்றும் டிச.12, 13 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதால், மாவட்டத்தில் உள்ள தகுதியானோா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com