கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இம்மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 15,452 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை
வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 26 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,478 ஆக அதிகரித்துள்ளது.
திங்கள்கிழமை 24 போ் உள்பட இதுவரை 14,978 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் 210 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களில் 250 போ் உயிரிழந்துள்ளனா்.