கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாள்களில் ரூ.10.50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் 113 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. பண்டிகை காலங்களில் மதுக்கடைகளில் வழக்கத்தை விட
கூடுதலாக மது விற்பனை நடைபெறுவதுண்டு. நிகழாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை,
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ. 10.50 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.