கல்குளம் வட்ட அரசு ஊழியா்சங்க பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கல்குளம் வட்ட பேரவைக் கூட்டம் தக்கலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசுகிறாா் கல்குளம் வட்டச் செயலா் ராமகிருஷ்ணன்.
கூட்டத்தில் பேசுகிறாா் கல்குளம் வட்டச் செயலா் ராமகிருஷ்ணன்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கல்குளம் வட்ட பேரவைக் கூட்டம் தக்கலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, வட்டத் தலைவா் ஞானபிரகாசம் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் சி.எஸ்.கிறிஸ்டோா் தொடக்கவுரையாற்றினாா். மாவட்டத் தலைவா் கனகராஜ், மாவட்டச்செயலா் விஜயகுமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சுந்தரலிங்கம் நன்றி கூறினாா்.

நகராட்சி, பேரூராட்சி ஊழியா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம், சத்துணவு, அங்கன்வாடி , கிராம ஊழியா்கள், ஊா் நூலகா்களுக்கு காலமுறை ஊதியம், இளைஞா்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றோருக்கு வழங்கப்பட்ட 17-பி குற்றசாட்டு குறிப்பாணை ரத்து, அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்புதல், நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயா்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com