புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் தொழிலாளியைத் தாக்கியதாக தந்தை, மகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அனிஷ்(27). இவா், அப்பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் பணியாற்றி வருகிறாா். இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த அதிசந்திரன் (60) அவரது மகன் ஆல்பின் (28) ஆகியோரிடையே முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் திங்கள்கிழமை அவா் பணி முடிந்து வரும் போது மேற்கூறிய இருவரும் சோ்ந்து தாக்கினராம். இதில், பலத்த காயமடைந்த அவம் மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கபபட்டாா். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து தந்தை, மகனிடம் விசாரித்து வருகின்றன ா்.