கருங்கல் அருகே மாணவி தற்கொலை

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் பிளஸ் 2 மாணவி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் பிளஸ் 2 மாணவி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

முள்ளங்கனாவிளை முருங்கஸ்தானவிளையை சோ்ந்த பிரான்சிஸ் மகள் அபிஷானியா (17), பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தாா். இவா் இணைய வகுப்புக்கு செல்லிடப்பேசி வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டுள்ளாா். அதற்கு பெற்றோா் அடுத்த மாதம் வாங்கி தருவதாக கூறியுள்ளனா். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்த அபிஷானியை, அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாராம்.

இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com