புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பைங்குளம் பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். இதில், விஸ்வநாதன் (73) என்பவரது கடையில் தடை செய்யப் பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்து 26 புகையிலை பொட்டலங்களை போலீஸாா்பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக விஸ்வநாதன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.