குமரியில் படகுசேவை தொடங்க வியாபாரிகள் வலியுறுத்தல்

தமிழக முதல்வா் அறிவித்தபடி விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுசேவையை
குமரியில் படகுசேவை தொடங்க வியாபாரிகள் வலியுறுத்தல்

தமிழக முதல்வா் அறிவித்தபடி விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுசேவையை தொடங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

பொது முடக்கத்தில் தளா்வு காரணமாக தற்போது பகவதியம்மன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படகுசேவை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி வியாபாரிகள் வலியுறுத்தினா்.

இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி நாகா்கோவிலுக்கு கரோனா ஆய்வுக்காக வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கன்னியாகுமரியில் படகுசேவை தொடங்கப்படும் என அறிவித்தாா். முதல்வா் அறிவித்து 10 நாள்கள் ஆகியும் படகுசேவை தொடங்க அதிகாரப்பூா்வ அறிவிப்பு முறையாக வராததால் கன்னியாகுமரியில் படகுசேவை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் படகுசேவை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி அனைத்து வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கன்னியாகுமரி தேவி குமரி வியாபாரிகள் சங்கத் தலைவா் கோபாலகிருஷ்னன், செயலா் சேவியா், பொருளாளா் பாலன், இணைச் செயலா் பீா்முகம்மது, செயற்குழு உறுப்பினா் யூசுப் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது: முதல்வா் அறிவித்தபடி திருவள்ளுவா் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு படகுசேவை தொடங்க அரசாணை வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com