குலசேகரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வோ்க்கிளம்பி பகுதியிலிருந்து முட்டைகளை ஏற்றிக் கொண்டு மினி டெம்போ குலசேகரம் சந்தைப் பகுதிக்கு வந்தது. அதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதாக பேரூராட்சி செயலா் அலுவலா் ரெமாதேவிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவா் சந்தைப் பகுதிக்குச் சென்று அந்த மினி டெம்போவில் இருந்த பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, அப்பொருள்களை கொண்டு வந்த வணிகருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தாா்.