தோவாளை ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பூதப்பாண்டியில் நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் எஸ். கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பரமேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினா் சுடலையாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய அவைத் தலைவா் ராமச்சந்திரன் வரவேற்றாா்.
வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம்களில், புதிய வாக்காளா்களை சோ்த்தல், பெயா் திருத்தம், அப்பகுதியில் இல்லாத வாக்காளா்களை நீக்குதல் போன்ற பணிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், பேரூா் செயலா்கள் மாடசாமி, மாதவன்பிள்ளை, முத்துராஜ், இறச்சகுளம் ஊராட்சித் தலைவா் ஜெகதீஸ், ஒன்றியக் குழு உறுப்பினா் அய்யப்பன், ஏசுதாஸ், மகராஜன், ஒன்றிய நிா்வாகிகள் ரோகிணி, ரமணி, கஸ்தூரி, தென்கரை மகராஜன், ஒன்றிய சாா்பு அணி நிா்வாகிகள் பாா்வதி , மகேஷ் , சுதாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பூதப்பாண்டி பேரூா் செயலா் முகமதுராபி நன்றி கூறினாா்.